நுனி முடி வெடிச்சு இருக்கா? இந்த ஒரு பழம் இருந்தா போதும் அனைவரது கண்ணும் உங்க மேல!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
பொதுவாக தலை முடி சேதமடைவதை சில குறிப்புகள் நமக்கு உணர்த்தும். இவற்றுள் முக்கியமான ஒன்று முடியின் நுனி பகுதியில் வெடிப்புகள் உண்டாவது. நுனி முடியில் உண்டாகும் வெடிப்பால் தலை முடி கலை இழந்து காணப்படும். அதன் மென்மை குணம் மாறி, முடி சோர சொரப்பாக உணரப்படும். தலை முடியின் வெளிப்புறத்தில் உண்டாகும் சேதத்தால் இந்த வெடிப்புகள் உண்டாகிறது.
நுனி முடியில் வெடிப்புகள் தோன்றும் போது அனைவரும் செய்யும் ஒரு வேலை , அந்த முடிகளை வெட்டி விடுவது தான். இதனால் முடியின் நீளம் குறைகிறது. ஆகவே முடிகளை வெட்டுவதற்கு மாற்றாக, அந்த வெடிப்புகளை போக்குவதற்கான வழிகளை தேடுவது தான் சரியான முயற்சி. இத்தகைய வெடிப்புகளை போக்க பல்வேறு இயற்கை வழிமுறைகள் பின்பற்றபட்டாலும் , அவக்காடோ இந்த சிகிச்சையில் சிறந்த பலனை தருகிறது.
அவகாடோவை ஏன் பயன்படுத்த வேண்டும் ?
அவகாடோவில் அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இந்த அமினோ அமிலம், கூந்தலில் ஈர பதத்தை தக்க வைக்க உதவுகிறது.
இந்த பழத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய், கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. இவை, சேதமடைந்த கூந்தலை சரிபடுத்தி வெடிப்புகளை போக்க பெரிதும் உதவுகிறது.
ஊட்டச்சத்துகள்
அவகாடோவில் வைட்டமின் ஏ , பி6, டி, ஈ மற்றும் மினேரல்கள் தாமிரம், இரும்பு போன்றவை உள்ளன. இவை கூந்தலை புத்துணர்ச்சி அடைய செய்து வேர்க்கால்களை பாதுகாக்கின்றன. இத்தகைய ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றன.
அவகாடோவில் வைட்டமின் ஈ போன்ற அன்டி ஆக்ஸ்சிடென்ட் இருப்பதால், தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து கூந்தல் பாதுகாக்கப் படுகிறது. இதனால் கூந்தலின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
பயன்கள்
அவகாடோவை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் , ஒரு இயற்கை கண்டிஷனர் போல் செயல்பட்டு கூந்தலை ஆரோகியமாக வைக்கிறது. செயலிழந்த வேர்கால்களை கூட வலுவடைய செய்து வளர்ச்சியை உண்டாக்கும் இந்த அவகாடோவை பயன்படுத்தி நுனி முடி வெடிப்பை போக்க சில வழிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படித்து முயற்சித்து பாருங்கள்.
வாழைபழம்:
அவகாடோ மற்றும் வாழை பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். இவற்றுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மென்மையான ஷம்பூவால் தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வருவதால் விரைவில் வெடிப்புகள் காணாமல் போகும்.
பாதாம் எண்ணெய் :
2 ஸ்பூன் அவகாடோ எண்ணெய் மற்றும் 3 ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை ஒன்றாக கலக்கவும். இந்த கலவை எண்ணெய்யை தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும். நுனி முடி வரை நன்றாக தடவவும். 40 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை ஷம்பூவால் அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வரவும்.
மயோனைஸ் :
அவகாடோவை நன்றாக மசித்து கொள்ளவும். இதனுடன் 2 ஸ்பூன் மயோனைஸ் சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்டை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற விடவும். பின்பு மென்மையான ஷம்பூவால் வெதுவெதுப்பான நீர் கொண்டு தலையை அலசவும். ஒரு மாதத்தில் 2 முறை இந்த முறையை பயன்படுத்தி தலையை அலசவும். விரைவில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
அவகாடோ மற்றும் பப்பாளி :
அவகாடோவை நன்றாக மசித்து கொள்ளவும். பப்பாளியை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை தலையில் தடவவும். அரை மணி நேரம் நன்றாக ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும். மாதத்திற்கு இரண்டு முறை இந்த முறையை பின்பற்றி வரவும். விரைவில் நுனி முடி வெடிப்புகள் விலகி உங்கள் கூந்தல் அழகாக மாறும்.
அவகாடோ மற்றும் தேன் :
அவகாடோவை நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும். தரமான தேன் வாங்கி, இந்த அவகாடோவில் ௪ ஸ்பூன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முடியில் நன்றாக தடவவும். 40 நிமிடங்கள் கழித்து வெந்நீரால் தலையை அலசவும். வாரத்தில் ஒரு முறை இதனை செய்து வரலாம்.. எளிதில் உங்கள் கூந்தலில் உள்ள வெடிப்புகள் மறையும்.
அவகாடோ மற்றும் முட்டை
முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து கொள்ளவும். இதனுடன் மசித்த அவகாடோ 3 ஸ்பூன் சேர்த்து கலக்கவும். 30 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின், வெந்நீரால் தலையை மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும்.இதனை ஒரு முறை முயற்சித்து பார்த்து நல்ல பலனை பெறலாம்.
அவகாடோ மற்றும் பால் :
அவகாடோவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். இதனுடன் 2 ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 30 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும். பிறகு ஷம்பூவால் தலையை அலசவும். மாதத்தில் 2 முறை இந்த வழியை பின்பற்றி வருவதால் உங்கள் நுனி முடி வெடிப்புகள் சில நாட்களில் மறையும்.
மேலே கூறிய முறைகளை பின்பற்றி அழகான வெடிப்புகள் இல்லாத கூந்தலை எளிதில் பெறலாம்.
இரவில் தூங்கி காலையில் எழும் போது தாடைப்பகுதிகளில் வலி அல்லது அடிக்கடி லேசான தலைவலியை உணர்கிறீர்களா? அப்படியானல், அதற்கு காரணம் இரவில் தூக்கத்தில் உங்களுக்கு பற்களைக் கொறிக்கும் பழக்கம் இருப்பது தான். பெரும்பாலும் இந்த பழக்கமானது அதிகப்படியான வேலைப்பளுவால் உண்டாகும் மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வரும். சில சமயங்களில், வளரும் குழந்தைகளும் இரவில் தூக்கத்தில் இம்மாதிரியான பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு பற்களைக் கொறிப்பதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்தும், இதை சரிசெய்வதற்கான சில இயற்கை வழிகள் குறித்தும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். காரணங்கள் ஒருவர் தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் பொதுவான சில காரணங்களாவன: * மனக்கவலை : அதிகளவு மன அழுத்தம் மற்றும் மனக் கவலையில் ஒருவர் இருந்தால், தூக்கத்தில் பற்களைக் கொறிக்க அதிக வாய்ப்புள்ளது. * மருந்துகள் : சில சமயங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளான மன இறுக்கத்தை...
இன்றைக்கு உணவகங்களுக்குச் சென்று இரவு உணவு சாப்பிடும் பெரும்பாலோரின் விருப்ப உணவாக இருப்பது பரோட்டா அல்லது புரோட்டா. நமது ஊர் பகுதிகளில் தான் எத்தனை வகையிலான பரோட்டாக்கள்....! மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா... எனப் பல வகைகள் காணப்படுகின்றன.. அப்படியே கொஞ்சம் கீழே வந்தால், இலங்கை பரோட்டா' என்று மற்றொரு வகை பரோட்டா காணப்படுகிறது. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் கிடைக்கின்றன. பல பெரிய பெரிய ஹோட்டல்களில் இந்த எல்லா வகையான பரோட்டாக்களும் கிடைக்கின்றன. ஏன் ஒரு சின்ன ஹோட்டலிலும் கூட குறைந்தது மூன்று வகையான பரோட்டாக்கள் கிடைக்கின்றன.. நாம் விரும்பி சாப்பிடும் இந்த பரோட்டா ஆரோக்கியமானது தானா? மைதா என்பது என்ன? இந்தப் பரோட்டா தயாரிக்கப் பயன்படுவது ‘வெள்ளை கோதுமை' என்றழைக்கப்படும் மைதா.கோதுமை மிகப் பழமையான தாவரப் புரதம். கோதுமையில் புரதம் மாவு வடிவில் இருப்பதால், 99 சதவீதம் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், மைதா அப்படிப்பட்டத...
சுத்தியும் மலை.... நடுவுல சின்ன குடிச வீடு அங்க நீயும் நானும் மட்டும். மழை எப்பவும் தூரிக்கிட்டே இருக்கணும் பக்கத்துல ஒரு பொட்டிக்கட கூட இருக்கக்கூடாது. ஆறு ஏழு கிலோமீட்டர் நடந்து தான் பால் வாங்க கூட போகணும். பக்கத்துல எந்த வீடும் இல்ல நம்ம வீடு மட்டும் தான் இப்படி இருந்தா எப்டி இருக்கும் என்று கண்ணைச் சிமிட்டி அவள் கேட்கும் போதே முகத்தில் நாலு அறை விடலாம் அளவுக்கு கோபம் வரும். என்ன செய்ய காதலித்து தொலைக்கிறேனே.... சூப்பர் பேபி எப்டி உனக்கு இப்டி எல்லாம் தோணுது என்று கொஞ்ச வேண்டிய நிலைமை. இந்த காதலிகள் எப்போ குழந்தையாய் மாறுவார்கள், எப்போ மனைவி ரோலை எடுப்பார்கள், எப்போது பத்திரகாளி அவதாரம் எடுக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்ககூட முடியாது. நொடிப்பொழுதில் அந்த மாற்றங்கள் நிகழும். பேருந்து நிலையம் : நான் பி.இ படித்து எம்.பி.ஏ படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று எவனோ ஒருவன் என் அப்பா காதில் ஓத அதையும் படித்து முடித்து இரண்டு வருடங்கள் வேலையில்லாமல் சுற்றி கடைசியாக நண்பன் ஒருவன் மூலமாக ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கிடைத்து செல்ல ஆரம்பித்திருந்தேன். ...
Comments
Post a Comment