இதுதான்... இப்படித்தான்! நாம் பிறக்க எந்த கிரகம் காரணம்?


“விதியை வெல்ல முடியாது, ஆனால் வீரியத்தைக் குறைக்க முடியும்” என்று பார்த்தோம்.
அப்படியானால் விதி என்பது என்ன?
அது... முன் ஜென்ம வினை, அந்த வினைகளை அனுபவிக்கவும், இந்தப் பிறப்பில், இனி பாவம் செய்யாமல் புண்ணியங்களைச் செய்வதாலும், பிறப்பற்ற மோட்சம் என்ற நிலையை அடைவது என்பதே நம் பிறப்பின் நோக்கம்.
இப்படி நாம் பிறக்க , அதாவது நம் பெற்றோருக்கு நாம் பிறக்க, யார் காரணம்?
சூரியனா? இல்லை அவர் ஆன்மா என்னும் உயிர்ப்புள்ளி.
சந்திரனா? இல்லை.... அவர் நம் மனம் மற்றும் உடல்.
செவ்வாயா? இல்லை.... அவர் நம் உடலின் ரத்தம்.
புதனா? இல்லை.... அவர் நம் அறிவு மற்றும் மேல்தோல்.
வியாழன் எனும் குரு பகவானா? இல்லை... அவர் புத்திர பாக்கியம் உண்டு என்கிற அருளைப் புரிபவர் மற்றும் நம் மூளை.
சுக்கிரனா?....அவரும் இல்லை... அவர் உடலின் உள்ளே உள்ள சுரப்பிகள் மற்றும் சுக்கிலம் சுரோணிதம்.
அப்படியானால் சனிபகவானா? அவரும் இல்லை... அவர் நம் முன் ஜென்ம வினைகளின் அடிப்படையில், இந்த ஜென்மத்தில் நாம் என்ன அனுபவிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நீதிபதி மற்றும் நம் உடலில் உள்ள இயங்கு மூட்டுக்கள்.
அப்படியானால் நாம் பிறக்க யார்தான் காரணம்,
சந்தேகமே இல்லை. ராகு கேதுக்கள்தான் காரணம்.
குழந்தை பிறக்க காதல் மட்டும் போதாது,
காமமும் வேண்டும், அந்தக் காமத்தின் அடிப்படை ஆண் மற்றும் பெண் ஜனன உறுப்புகள். இந்த உறுப்புகளில் பெண்ணின் உறுப்பு ராகுவாகும்,
ஆணின் உறுப்பு கேதுவாகும்.
இந்த இரண்டும் இணையும்போதுதான், உயிர் எனும் ஜனனம் என்கிற பிறப்பு ஏற்படுகிறது.
இந்த இணைவுக்குப் பின்தான் மேலே குறிப்பிட்ட மற்ற கிரகங்களின் உடல் வடிவம் உண்டாகிறது.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்... பிறப்பு என்பது யாரால் ஏற்படுகிறது என்று!
இந்த உலகின் அத்தனை ஆசை, பேராசை,இன்பம்
இந்த இச்சைகளால் உண்டாகும் துன்பம், துயரம், விரக்தி என அனைத்தும் ராகு, கேது எனும் இரண்டு பாம்புகளாலேயே உண்டாகிறது.
எனவேதான் ’இந்திரியம் அடக்கியவன் இந்திரலோகம் செல்லலாம்’ என்று சொல்லிவைத்தார்கள் முன்னோர்கள்.
“கற்பொழுக்கம் கடவுளாகவே ஆகலாம்” என்று ஒழுக்கம் குறித்துப் போதித்திருக்கிறார்கள்.
இப்படி பல சுக சோகங்களுக்குக் காரணமான ராகு கேது உருவான கதையைப் பார்ப்போம்,
உருவான கதை என்றால்...?
அவர்கள் பிறக்கும்போது ஒரே உடல், ஒரே உயிராகத்தான் பிறந்தார்கள்,
பின்னாளில் இரண்டு உடல் இரண்டு உயிர் எனப் பிரிக்கப்பட்டார்கள்,
சப்தரிஷிகளில் ஒருவரான மரீசியின் புதல்வர் காசியபர் ரிஷி. இவருக்கு 13 மனைவியர். இவர்களில் அதிதிக்குப் பிறந்தவர் சூரியபகவான். (இந்திரன் முதலான தேவர்களுக்கும் இவர்களே பெற்றோர்).
அதிதியின் சகோதரி திதிக்கும் காசியபருக்கும் பிறந்தவர்கள் அசுரர்கள், அந்த அசுரர்களில் ஒருவர்தான் சுபர்பானு. சுவர்பானு என்றும் சொல்கிறது புராணம்.
இந்த சுபர்பானுதான் ராகு கேது என்றானார். அவர் எப்படி ராகு கேது ஆனார்?

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?