ஆச்சரியங்களை அள்ளித்தெளிக்கும் முதல் காதல்! காதலியை இப்படியா சந்திக்கணும்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான நாட்கள் என்றால் நான் கண்டிப்பாக என்னுடைய பள்ளி நாட்களை குறிப்பிடுவேன்... நண்பர்கள் கூட்டம் அப்போது தான் சேர ஆரம்பிக்கும். வாழ்க்கை குறித்த எந்த பயமோ... திட்டமோ முன் யோசனையோ எதுவும் இருக்காது.
வாழ்க்கையை எந்த வித முன் அபிப்ராயங்களின்றி அணுகுவோம். அப்படியான இளம் வயதில் ரசித்தவற்றை இருபது வருடங்கள் கழித்து ஏன்.... அறுபது வருடங்கள் கழித்து நம்முடைய முதுமைப் பருவத்தில் நினைத்தால் கூட மிகவும் சுவாரஸ்யமானதாய் இருக்கும்.
கெட் டூ கெதர் :
இந்நேரம் என்னுடன் படித்த பலரும் வேலை... குடும்பம் என்று செட்டிலாகி இருப்பார்கள். பலரும் வெளியூர்களுக்கு வந்துவிட்டோம். இந்நிலையில் நாங்கள் படித்தப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னால் மாணவர் சங்கம் சார்பாக எல்லாருக்கும் அழைப்பு வந்திருந்தது.
போய் பார்க்கலாம் :
யாரை எங்கிருந்து பிடித்தார்கள்... என்னுடைய தொடர்பு எண் எப்படி கிடைத்தது என்று எதுவும் புரியவில்லை... யார் யாரோ பேசினார்கள். அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பள்ளியில் செய்த சேட்டைகளை, வாங்கிய திட்டுக்களை, அடிகளை எல்லாம் நினைவூட்டி மறந்துட்டியாடா என்று பேசினார்கள்.. ஏதோ எனக்கே இருபது வயது குறைந்து மீண்டும் பள்ளிக்குச் சென்ற உணர்வு.
நண்பர்கள். :
இப்போது நான் படித்த பள்ளி எப்படியிருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அதைவிட உடன் படித்த நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று ஆர்வத்துடன் கண்டிப்பாக சொல்லிவிட்டான்.
அங்கே வேறு யார் வருவார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது... யார் பெயர் விடுபட்டுள்ளது... அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்று தேடி அவர்களையும் அழைக்கும் வேலை மும்முரமாக நடந்தது.
சத்யா :
பேச்சுவாக்கில் சத்யா பெயரும் அடிப்பட்டது.... சத்யா மறக்க முடியுமா இந்தப் பெயரை... என் வாழ்க்கையில் வந்த முதல் தேவதையாயிற்றே... எட்டாம் வகுப்பிலிருந்து அவள் மீது ஒரு மையல்...
அவளுக்காக அவளை பார்க்க வேண்டும் என்பதற்காக சைக்கிளை உருட்டிக் கொண்டு பன்னிரெண்டு கிலோமீட்டர் அவளுக்கு பின்னால் சென்றிருக்கிறேன். பதினோராம் வகுப்பில் தான் பிறருக்குத் இந்த விஷயம் தெரிந்தது. அப்போதும் சத்யாவிடம் நேராக சென்று பேசும் தைரியம் எனக்கு இருக்க வில்லை.
கடைசி நாள் :
பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வு முடிந்து எல்லாரும் கிளம்பிய நேரம். என்னுடைய கூட்டாளிகள் சிலர்... மாப்ள இதவிட்டா நீ சத்யா பாக்கமுடியாதுடா ஒழுங்கா போய் உன் லவ்வ சொல்லு என்று கிளப்பிவிட்டார்கள்.
தயங்கி தயங்கி சென்றேன்.
அவளை பள்ளி முழுவதும் தேடினேன்.... எங்கும் ஆளில்லை. இரண்டாவது மாடி வகுப்பறையில் ஒவ்வொரு அறைக்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
போகாத சத்யா :
மேலேயிருந்து எதேச்சையாக கீழே பார்க்க.... வாசலில் ஒருவர் டிவிஎஸ் 50யில் வந்தார். அவரின் பின்னால் ஓடிச்சென்று ஒருத்தி ஏறுகிறாள்....
சத்யா... அது சத்யா தான். மேலேயிருந்து சத்யா... நில்லு போகாத சத்யா என்று கத்திக் கொண்டே ஓடினேன்.... ஆனால் அவள் மறைந்து விட்டாள். நான் வருவதற்குள்ளாக அவள் சென்றுவிட்டாள். கடைசியாக அவளுக்கு ஒரு பாய் கூட சொல்ல முடியவில்லை ஏன் அவளின் முகத்தைக் கூட சரியாக பார்க்க முடியவில்லை.
நண்பர்களின் வாக்கு :
எந்த நேரத்தில் வாய் வைத்தார்களோ நண்பர்கள் சொன்னது போல அதற்க்குப்பிறகு சத்யாவை சந்திக்கவே முடியவில்லை.
இத்தனை ஆண்டுகள் கழித்து நிகழப்போகும் கெட் டூ கெதரில் மீண்டும் அவள் பெயர்.... சத்யா... அவள் வருவாளா? இத்தனை ஆண்டுகள் கழித்து என்னை அடையாளம் கண்டு கொள்வாளா?எதுவும் தெரியவில்லை.
தொடர்பில் இல்லை :
சத்யாவை அழைக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தவுடன் சொல்லி வைத்தாற் போல எல்லாரும் இவனிடமே வந்து சத்தியாவின் தொலைபேசி எண்ணை கேட்டார்கள் .
அவ்வளவு நம்பிக்கையா? ஒவ்வொருரிடமும் சத்தியாவைப் பற்றி எனக்குத் தெரியாது.... என்று சொல்லி சொல்லியே அவனுக்கு பாதி உயிர் கழண்டு விடும் போலிருந்தது.
அந்த நாள் :
திட்டமிட்டபடி எல்லாரும் தங்களது குடும்பத்தினருடன் பள்ளிக்குச் சென்றார்கள். சட்டை கிழித்து சண்டையிட்டவன். இன்று வந்து தோல்தட்டி கைகுலுக்கி வரவேற்கிறான்.அழுக்கச்சட்டையோடு வந்து ஆசிரியரிடம் அடி வாங்கியவன். இன்று ப்ராண்டட் ஷர்ட் அணிந்திருந்தான். மாடு மேய்க்க கூட லாயிக்கில்ல என்று புகழ்ப்பெற்ற நண்பன் வங்கியொன்றில் உயர்பொறுப்பிலிருந்தா.
எவ்வளவு மாற்றங்கள்.... எத்தனை முகங்கள். எத்தனை விசாரிப்புகள்.
ஆசிரியர் :
மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் அங்கே வந்திருந்தார்கள் பிடி வாத்தியார் . வருவதைக் கண்டாலே பயந்து நடுங்கி ஓடும் மாணவர்கள் இப்போது அவருக்கு சமமாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இவருக்கு என்னா வயசிருக்கும்டா.... எங்க பெரியண்ணன் படிக்கிறதுல இருந்து இந்த வாத்தி இப்டியேதாண்டா இருக்காரு என்று நாங்கள் பேசிய தமிழ் வாத்தியார். இப்போதும் அப்படியே தான் இருக்கிறார். ஆனால் கொஞ்சம் தளர்ந்திருந்தார்.
அறிமுகம் :
ஒவ்வொரு நண்பரிடத்திலும் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். மனைவியையும் மகளையும் அறிமுகப்படுத்தினான். சிலரை உடனேயே அடையாளம் கண்டுகொண்டாலும் பலரை யாரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன் இதே பள்ளியில் நடந்த சம்பவங்களை விவரித்தப் பின்னர் லேசாக நினைவுக்கு வந்தது.
சத்யா :
எங்கே என் முதல் காதலி? என் தேவதை.... பார்த்தவுடன் அவளை அடையாளம் காண்பேனா அல்லது அவள் ரொம்பவே மாறியிருப்பாளா யாரிடம் கேட்க... யாரிடமாவது கேட்டாள்.. மச்சி நீ இன்னும் சத்தியாவ மறக்கலையா என்று பிடித்துக் கொள்வார்களோ என்று பயமாகவும் இருந்தது.
யாரிடமும் கேட்கக்கூடாது நாமே கண்டுபிடிக்கணும். என்று யாருக்கும் தெரியாமல் தேட ஆரம்பித்தான்.
மகள் :
பல நிகழ்சிகள், பல போட்டிகள்... பேச்சாளர்கள்... விருதுகள்... என்று களைகட்டிய விழாவில் இவன் மட்டும் இறுக்கமாய் இருந்தான். ஓரிடத்தில் நின்றிருந்தாலும் கண்கள் முழுக்க சத்தியவைத் தேடி அலைந்து கொண்டிருந்தது.
மகள் பசிக்காக அழ... அவளை சமாதனப்படுத்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கிலிருந்து வெளியே கூட்டி வந்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
ஒரு குரல் :
ஸ்பீக்கரில் பாட்டு போட்டு அலறவிட்டிருந்தார்கள். அதற்காகவே பயந்து அழுதாள் மகள்.
சற்றுத் தள்ளி வண்டிகள் நிற்குமிடத்தில் நின்று கொண்டு போடப்பட்டிருந்த சீரியல் லைட்டுகளை காட்டி பேசிக்கொண்டிருந்தான் மகளுடன்.
லவ் பண்ணது உண்மை தான் ;
அப்போது ஹாய்... என்றது ஒரு குரல்.
திரும்பிப் பார்க்க ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள்.
ஐயோ யாருன்னு தெரியலையே.... நம்ம கிளஸா பக்கத்து கிளாஸா? என்று யோசித்துக் கொண்டே ஹாய் என்றான்.
அருகில் வந்து சத்யா என்று அந்தப் பெண் ஆரம்பிக்க....
குட்டி சத்யா :
அடடா.. இன்னும் எத்தன பேர் கேப்பீங்க.... ஆமா... எட்டாவது ல இருந்து அவள லவ் பண்ணேன் தான். கடைசி நாள் அவள பாக்கக்கூட இல்லங்க சத்தியமா அவளோட காண்டாக்ட் நம்பர் என்ட்ட இல்லங்க என்று கொட்டினான்.
இரவில் தூங்கி காலையில் எழும் போது தாடைப்பகுதிகளில் வலி அல்லது அடிக்கடி லேசான தலைவலியை உணர்கிறீர்களா? அப்படியானல், அதற்கு காரணம் இரவில் தூக்கத்தில் உங்களுக்கு பற்களைக் கொறிக்கும் பழக்கம் இருப்பது தான். பெரும்பாலும் இந்த பழக்கமானது அதிகப்படியான வேலைப்பளுவால் உண்டாகும் மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வரும். சில சமயங்களில், வளரும் குழந்தைகளும் இரவில் தூக்கத்தில் இம்மாதிரியான பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு பற்களைக் கொறிப்பதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்தும், இதை சரிசெய்வதற்கான சில இயற்கை வழிகள் குறித்தும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். காரணங்கள் ஒருவர் தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் பொதுவான சில காரணங்களாவன: * மனக்கவலை : அதிகளவு மன அழுத்தம் மற்றும் மனக் கவலையில் ஒருவர் இருந்தால், தூக்கத்தில் பற்களைக் கொறிக்க அதிக வாய்ப்புள்ளது. * மருந்துகள் : சில சமயங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளான மன இறுக்கத்தை...
இன்றைக்கு உணவகங்களுக்குச் சென்று இரவு உணவு சாப்பிடும் பெரும்பாலோரின் விருப்ப உணவாக இருப்பது பரோட்டா அல்லது புரோட்டா. நமது ஊர் பகுதிகளில் தான் எத்தனை வகையிலான பரோட்டாக்கள்....! மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா... எனப் பல வகைகள் காணப்படுகின்றன.. அப்படியே கொஞ்சம் கீழே வந்தால், இலங்கை பரோட்டா' என்று மற்றொரு வகை பரோட்டா காணப்படுகிறது. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் கிடைக்கின்றன. பல பெரிய பெரிய ஹோட்டல்களில் இந்த எல்லா வகையான பரோட்டாக்களும் கிடைக்கின்றன. ஏன் ஒரு சின்ன ஹோட்டலிலும் கூட குறைந்தது மூன்று வகையான பரோட்டாக்கள் கிடைக்கின்றன.. நாம் விரும்பி சாப்பிடும் இந்த பரோட்டா ஆரோக்கியமானது தானா? மைதா என்பது என்ன? இந்தப் பரோட்டா தயாரிக்கப் பயன்படுவது ‘வெள்ளை கோதுமை' என்றழைக்கப்படும் மைதா.கோதுமை மிகப் பழமையான தாவரப் புரதம். கோதுமையில் புரதம் மாவு வடிவில் இருப்பதால், 99 சதவீதம் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், மைதா அப்படிப்பட்டத...
சுத்தியும் மலை.... நடுவுல சின்ன குடிச வீடு அங்க நீயும் நானும் மட்டும். மழை எப்பவும் தூரிக்கிட்டே இருக்கணும் பக்கத்துல ஒரு பொட்டிக்கட கூட இருக்கக்கூடாது. ஆறு ஏழு கிலோமீட்டர் நடந்து தான் பால் வாங்க கூட போகணும். பக்கத்துல எந்த வீடும் இல்ல நம்ம வீடு மட்டும் தான் இப்படி இருந்தா எப்டி இருக்கும் என்று கண்ணைச் சிமிட்டி அவள் கேட்கும் போதே முகத்தில் நாலு அறை விடலாம் அளவுக்கு கோபம் வரும். என்ன செய்ய காதலித்து தொலைக்கிறேனே.... சூப்பர் பேபி எப்டி உனக்கு இப்டி எல்லாம் தோணுது என்று கொஞ்ச வேண்டிய நிலைமை. இந்த காதலிகள் எப்போ குழந்தையாய் மாறுவார்கள், எப்போ மனைவி ரோலை எடுப்பார்கள், எப்போது பத்திரகாளி அவதாரம் எடுக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்ககூட முடியாது. நொடிப்பொழுதில் அந்த மாற்றங்கள் நிகழும். பேருந்து நிலையம் : நான் பி.இ படித்து எம்.பி.ஏ படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று எவனோ ஒருவன் என் அப்பா காதில் ஓத அதையும் படித்து முடித்து இரண்டு வருடங்கள் வேலையில்லாமல் சுற்றி கடைசியாக நண்பன் ஒருவன் மூலமாக ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கிடைத்து செல்ல ஆரம்பித்திருந்தேன். ...
Comments
Post a Comment