கண்ணடிச்சு காமி என்றால் அந்நியன் அம்பி ஸ்டைலில் கண்ணடித்து சிரிக்க வைத்து கடுப்பேற்றுவது எல்லாம் பழைய ஸ்டைல், குழந்தைகள் முதற்கொண்டு இன்றைக்கு மிகவும் அசால்ட்டாக கண்ணடிக்கிறார்கள். எங்கே யாரைப் பார்த்து, எதில் கற்றுக் கொண்டிருப்பார்கள் எல்லாம் தனி ட்ராக்.
சிலருக்கு காரணமேயில்லாமல் கண்கள் தானாக துடிக்கும். அதை அனுபவித்திருக்கிறீர்களா? சிலருக்கு அது உணர முடியும், சிலரால் அதனை உணர முடியாது, கண்களை வேகமாக சிமிட்டுவது போலவோ அல்லது கண்ணிமைகள் படபடவென்று அடித்துக் கொள்வது போலவோ தோன்றிடும். சிலர் கண்கள் இப்படி துடிப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும், பணம் வரப்போகிறது என்றெல்லாம் சொல்வார்கள்.
கண்கள் துடிக்குமா? அப்படி துடிப்பதற்கு என்ன காரணம்.... ஏதேனும் பிரச்சனைகளின் அறிகுறியா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
மயோகிமியா :
கண்கள் அடிக்கடி துடிப்பதை மயோகிமியா என்று அழைப்பார்கள். கண்களின் கீழ் பகுதியோ அல்லது கண்களின் இமைப்பகுதியோ துடிக்கும். எதற்காக என்று குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடிகக் முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம்.
இது எப்போதாவது நீடிக்கும், அல்லது சிலருக்கு தோன்றி மறைந்து விடும். இது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணிக்கில் நீடிக்கக்கூடாது. மற்றபடி எப்போதாவது இப்படியான பிரச்ச்னை எழுந்தால் கவலை கொள்ளத்தேவையில்லை.
பெரும்பாலும் உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினாலேயே இந்தப் பிரச்சனை எழுந்திருக்கக்கூடும்.
ஸ்ட்ரஸ் :
கண் துடிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஸ்ட்ரஸ் தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது ஏராளமான உள்ளுறுப்புகளில் மாற்றங்கள் உண்டாகிறது.
அவற்றில் ஒன்றாக, அல்லது அதன் அறிகுறியாக கண்கள் துடிக்கிறது.
டயர்ட் :
இன்றைக்கு எல்லாமே கணினி யுகத்திற்கு மாறிவிட்டோம் என்பதற்காக பொழுதன்னைக்கும் கணினி முன்பாக உட்கார்ந்திருப்பதும் இதற்கு ஓர் காரணமாக இருக்கிறது. இன்றைக்கு அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவேளி விடுங்கள். தொடர்ந்து அதிக வெளிச்சத்துடன் இருக்கக்கூடிய கணினியைப் பார்க்காமல் வேறு சில இடங்களைப் பார்க்கலாம்.
தூக்கம் :
போதுமான அளவு நீங்கள் தூங்கவில்லை என்றால் கூட இப்படியான பிரச்சனைகள் எழலாம். சிலர் இரவு நீண்ட நேரம் கேட்ஜெட்ஸ் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இதனால் இரவு தூக்கும் வருவது தாமதமாகும். வேலைக்காரணமாக காலையில் சீக்கிரம் எழுவது இதனால் உங்களுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காமல் போய்விடும். இப்படி தொடர்ந்து உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை என்றால், அதன் வெளிப்பாடாக கண்கள் இப்படித் துடிக்கும்.
ஸ்ட்ரைன் :
கண்களுக்கு அதிக வேலைத் தருவது. கேட்க சிரிப்பாக இருந்தாலும், இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். சிலர் கண்ணாடி அணிய வேண்டியிருக்கும், ஆனால் அவர்கள் அதனை அணியாமல் தவிர்ப்பார்கள், குறைந்த வெளிச்சத்தில் டிவி பார்ப்பது, அதிக நேரம் ஒரே பொசிசனில் உட்கார்ந்து படிப்பது ஆகியவை கண்களுக்கு அதிக ஸ்டரஸ் கொடுக்கும்.
20:20:20
கம்யூட்டரில் தொடர்ந்து பணியாற்றுபவர்கள் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும். கணினி என்றில்லை ஸ்மார்ட் ஃபோன்,டிவி என கண்களுக்கு தொடர்ந்து அதிக வேலை கொடுப்பவர்கள் இதனைப் பின்பற்றலாம்.
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை என உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் சிஸ்டம் திரையிலிருந்து விலகி 20 அடி தூரத்தில் இருப்பவற்றை பார்க்க வேண்டும். இருபது நொடிகள் பார்க்க வேண்டும்.
கேஃபைன் :
ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கும் மேல் காபி டீ குடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கும் கண்கள் துடிக்கும். உடலில் அதிகப்பட்சமாக சேருகிற கேஃபைன் கண்களை துடிக்கச் செய்திடும். கேஃபைன் எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொண்டால் கண்கள் துடிப்பதும் குறைந்திடும்.
கண்களுக்கு வறட்சி :
பலரும் கண்கள் வறண்டு எரிச்சலடைவதை சந்தித்திருப்பார்கள். குறிப்பாக இந்தப் பிரச்சனை ஐம்பது வயது மேலானவர்களுக்கு வரக்கூடும். கேட்ஜெட்ஸ் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த கண்களில் வறட்சி ஏற்படுவது சகஜம். இதன் அறிகுறிகளாக கண்கள் வறண்டு காணப்படும், அதீத எரிச்சல் உண்டாகும். கண்களை அடிக்கடி கசக்க வேண்டும் போன்ற உணர்வு மேலோங்கும்.
மருத்துவரிடம் சென்றால் அவர் இந்த வறட்சியைப் போக்க ஐ டிராப்ஸ் கொடுப்பார்.
நியூட்ரிசியன் :
உங்கள் உடலில் மக்னீசியம் குறைந்தால் அவற்றின் வெளிப்பாடாக கூட கண்களுக்கு இந்தப் பாதிப்பு உண்டாகலாம். அதோடு எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் தேவை.
அலர்ஜி :
சிலருக்கு கண்களில் ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டு கண்களில் தண்ணீர் ஒழுகுவது, எரிச்சல், கண்கள் வீங்குவது ஆகியவை உண்டாகும். அதனால் கண்களை அழுத்த கசக்கும் போது கண்களுக்கு அதிக ஸ்ட்ரைன் உண்டாகி கண்ணிமைகள் துடிக்கக்கூடும்.
இரவில் தூங்கி காலையில் எழும் போது தாடைப்பகுதிகளில் வலி அல்லது அடிக்கடி லேசான தலைவலியை உணர்கிறீர்களா? அப்படியானல், அதற்கு காரணம் இரவில் தூக்கத்தில் உங்களுக்கு பற்களைக் கொறிக்கும் பழக்கம் இருப்பது தான். பெரும்பாலும் இந்த பழக்கமானது அதிகப்படியான வேலைப்பளுவால் உண்டாகும் மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வரும். சில சமயங்களில், வளரும் குழந்தைகளும் இரவில் தூக்கத்தில் இம்மாதிரியான பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு பற்களைக் கொறிப்பதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்தும், இதை சரிசெய்வதற்கான சில இயற்கை வழிகள் குறித்தும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். காரணங்கள் ஒருவர் தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் பொதுவான சில காரணங்களாவன: * மனக்கவலை : அதிகளவு மன அழுத்தம் மற்றும் மனக் கவலையில் ஒருவர் இருந்தால், தூக்கத்தில் பற்களைக் கொறிக்க அதிக வாய்ப்புள்ளது. * மருந்துகள் : சில சமயங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளான மன இறுக்கத்தை...
இன்றைக்கு உணவகங்களுக்குச் சென்று இரவு உணவு சாப்பிடும் பெரும்பாலோரின் விருப்ப உணவாக இருப்பது பரோட்டா அல்லது புரோட்டா. நமது ஊர் பகுதிகளில் தான் எத்தனை வகையிலான பரோட்டாக்கள்....! மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா... எனப் பல வகைகள் காணப்படுகின்றன.. அப்படியே கொஞ்சம் கீழே வந்தால், இலங்கை பரோட்டா' என்று மற்றொரு வகை பரோட்டா காணப்படுகிறது. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் கிடைக்கின்றன. பல பெரிய பெரிய ஹோட்டல்களில் இந்த எல்லா வகையான பரோட்டாக்களும் கிடைக்கின்றன. ஏன் ஒரு சின்ன ஹோட்டலிலும் கூட குறைந்தது மூன்று வகையான பரோட்டாக்கள் கிடைக்கின்றன.. நாம் விரும்பி சாப்பிடும் இந்த பரோட்டா ஆரோக்கியமானது தானா? மைதா என்பது என்ன? இந்தப் பரோட்டா தயாரிக்கப் பயன்படுவது ‘வெள்ளை கோதுமை' என்றழைக்கப்படும் மைதா.கோதுமை மிகப் பழமையான தாவரப் புரதம். கோதுமையில் புரதம் மாவு வடிவில் இருப்பதால், 99 சதவீதம் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், மைதா அப்படிப்பட்டத...
சுத்தியும் மலை.... நடுவுல சின்ன குடிச வீடு அங்க நீயும் நானும் மட்டும். மழை எப்பவும் தூரிக்கிட்டே இருக்கணும் பக்கத்துல ஒரு பொட்டிக்கட கூட இருக்கக்கூடாது. ஆறு ஏழு கிலோமீட்டர் நடந்து தான் பால் வாங்க கூட போகணும். பக்கத்துல எந்த வீடும் இல்ல நம்ம வீடு மட்டும் தான் இப்படி இருந்தா எப்டி இருக்கும் என்று கண்ணைச் சிமிட்டி அவள் கேட்கும் போதே முகத்தில் நாலு அறை விடலாம் அளவுக்கு கோபம் வரும். என்ன செய்ய காதலித்து தொலைக்கிறேனே.... சூப்பர் பேபி எப்டி உனக்கு இப்டி எல்லாம் தோணுது என்று கொஞ்ச வேண்டிய நிலைமை. இந்த காதலிகள் எப்போ குழந்தையாய் மாறுவார்கள், எப்போ மனைவி ரோலை எடுப்பார்கள், எப்போது பத்திரகாளி அவதாரம் எடுக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்ககூட முடியாது. நொடிப்பொழுதில் அந்த மாற்றங்கள் நிகழும். பேருந்து நிலையம் : நான் பி.இ படித்து எம்.பி.ஏ படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று எவனோ ஒருவன் என் அப்பா காதில் ஓத அதையும் படித்து முடித்து இரண்டு வருடங்கள் வேலையில்லாமல் சுற்றி கடைசியாக நண்பன் ஒருவன் மூலமாக ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கிடைத்து செல்ல ஆரம்பித்திருந்தேன். ...
Comments
Post a Comment