இதுதான்... இப்படித்தான்! ராகு கிழக்குன்னா... கேது மேற்கு!


ராகு என்ன மாதிரியான தோஷ பலன்களை தருவார் என்று பார்த்தோம். கேது பகவான் என்ன செய்வார் என்று இப்போது பார்ப்போம்.
பொதுவாக, கேது எதையெல்லாம் வேண்டாம் என ஒதுக்கி விடுகிறாரோ, அதையெல்லாம் ராகு பெற்றுக்கொள்வார்.
எப்படி? கேதுவுக்கு பணம் பொருட்டல்ல. ஆனால் ராகுவுக்கு அதீதீதமாக தேவை,
கேதுவுக்கு சுகபோகங்கள் தேவையில்லை,
ஆனால் ராகுவுக்கு சுகபோகங்களுக்கு வானமே எல்லை,
கேது எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்.
ராகு பகவான், அவர் விரும்பியதை மட்டுமே ஏற்றுக்கொள்வார்.
சரி... கேது பகவானின் தோஷ பலன்களைப் பார்ப்போம்.
லக்னத்தில் கேது இருந்தால்:- பெரிய ஆசைகள் இல்லாதவர், இருப்பதை கொண்டு திருப்தி அடைபவர்.
2ல் கேது இருந்தால்:- பொருளாதார ஆசை இல்லாதவர், விருப்பங்கள் ஏதும் இல்லாதவர்.
7ல் கேது இருந்தால்:- தாம்பத்ய ஈடுபாடு, நாட்டம் இல்லாதவர்.
8ல் கேது இருந்தால்:- தன் ஆயுளை தானே எப்படிக் குறைப்பது என்று தேடி குறைத்துக் கொள்பவர்.
5ல் கேது இருந்தால்:- புத்திர பாக்கியத்தில் தடை ஏற்படுத்துபவர். காரணம்? சுகபோக ஆசையே இல்லாதவர் எப்படி பிள்ளைச் செல்வத்தை ஏற்படுத்துவார்.
சரி, இப்படி ராகு கேது தோஷம் உள்ளவர்களை, இதே அமைப்பில் உள்ளவர்களைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்பது ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகிறதே... இது சரியா?
நமது முந்தைய பதிவை மீண்டும் வாசித்துவிடுங்கள்.
உதாரணமாக, 7 ல் உள்ள ராகு தாம்பத்ய வேட்கை அதிகம் உள்ளவர் என பார்த்தோம்.
அதே சமயம் 7 ல் உள்ள கேது தாம்பத்ய ஈடுபாடே இல்லாதவர் அல்லது குறைவான ஈடுபாடு உள்ளவர்.
இப்போது சொல்லுங்கள் இந்த இரண்டு அமைப்பையும் உடையவர்களை இணைந்தால் வாழ்வு சிறக்குமா?
உண்மையில் இந்த ராகு கேது தோஷத்தை இப்போது சில வருடங்களாகத்தான் பெரிதும் பார்க்கப்படுகிறது அல்லது பார்க்கச் செய்யப்படுகிறது.
சர்ப்பதோஷம் இருக்கும் ஒருவர், தோஷம் இல்லாதவரைத் திருமணம் செய்து சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவருபவர்கள் ஏராளம் உண்டு.
ஏன்... உங்களில் திருமணம் நடந்த பலபேர், குறிப்பாக 40 - 50 வயதுகளில் உள்ளவர்கள் இப்போது உங்கள் ஜாதகத்தை எடுத்துப்பாருங்கள். உங்களில் நிறைய பேருக்கு இந்த சர்ப்பதோஷம் என்னும் ராகுகேது தோஷம் இருக்கும். ஆனாலும் நல்ல இனிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருவார்கள்.
இப்போது இதே ஜோதிடம்தான் வேறொரு விளக்கத்தையும் மாற்றையும் கூறுகிறது.
அதையும் பார்ப்போம்.
5ல் ராகுவோ, கேதுவோ உள்ளவர்களுக்கு 5ல் ராகுவோ கேதுவோ இல்லாத ஜாதகத்தைதான் சேர்க்கவேண்டும் என்கிற போது விதி உள்ளது,
அப்படியானால் 1,2,7,8ல் ராகு கேது உள்ளவர்களை அதே அமைப்பைக் கொண்ட ஜாதகத்தோடு இணைப்பது என்பது எப்படி சரியாகும்?
பொதுவிதி என்பது அனைத்திற்கும் ஒரே மாதிரிதான் பொருந்த வேண்டும் அல்லவா!
ஆனால் ஏன் இந்த மாறுபாடு?
ஒன்றும் இல்லை, பணம்... பணம்... பணம்தான் காரணம்,
அந்த ராகு கேது தோஷத்தை வைத்து பரிகாரம் என்ற பெயரில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதையும், எது சரியான பரிகாரம் என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா?
-தெளிவோம்

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?