Posts

கிராம மேம்பாட்டுக்கு உலக வங்கி நிதி

Image
தமிழகத்தில் உள்ள கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி 10 கோடி டாலர் (6,400 கோடி) நிதி வழங்கியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் ஜனவரி 31அன்று தெரிவித்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் உலக வங்கியும் மத்திய அரசும் ஜனவரி 30 அன்று கையெழுத்திட்டன. தமிழ்நாடு கிராமப்புற மாற்றத்துக்கான இந்தத் திட்டத்தால் 26 மாவட்டங்களும் 4 லட்சம் மக்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

தொழில் தொடங்கலாம் வாங்க : ஆஃப்லைனும் அவசியம்!

Image
ஜி. எஸ்.டி வரி விதிப்பு வந்த பிறகு எங்களுடைய தொழில் படுத்துவிட்டது. கேஷில் அதிகம் புழங்கும் எங்கள் தொழிலை ஒயிட்டில் செய்வது கடினம். என்ன செய்வதென்று புரியவில்லை. உங்கள் தொழில் எதுவென்று தெரியாததால், அதற்கான ஆலோசனை சொல்வது கடினம். அதனால், இதைப் பொதுவாக எல்லோருக்குமானதாகச் சொல்கிறேன். கணக்கில் வராமல் காலம் காலமாக கேஷில் செய்துவந்த பல வியாபாரங்கள் சிறுத்துப்போனது நிஜம். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவை சிறுதொழில்கள்தாம். பெரிய தொழிலதிபர்களுக்கு எந்த இக்கட்டையும் சமாளிக்கும் பலம் உண்டு. இந்நிலையில், சிறு தொழிலதிபர்கள் அவசியம் நிர்வாக ஆலோசனை பெறுவது நல்லது. ஒரு நல்ல ஆடிட்டர் தேவை. எல்லாத் தொழில்களும் மெல்ல மெல்ல முறைபடுத்தப்பட்டுவருகின்றன. அதனால், தற்காலிக நஷ்டத்தில் மனம் தளராமல் நல்ல ஆலோசகரைக் கொண்டு உங்கள் தொழிலை நவீனப்படுத்துவதற்கான ஆலோசனை கேளுங்கள். பல ஆன்லைன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகள் சம்பாதிப்பதாகச் சொல்கின்றன. இருந்தும் நஷ்டத்தில் இயங்குவதாகவும் தெரிவிக்கின்றன. நான் ஆன்லைன் விற்பனை செய்ய நினைக்கிறேன். இதில் லாபம் உண்டா இல்லையா? - ஜெகன் மோகன், பெங்...

வேலை வேண்டுமா? - இஸ்ரோவில் பணி

Image
இ ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், நிர்வாகப் பிரிவு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள். தற்போது விஞ்ஞானி, பொறியாளர் பதவியில் 106 காலியிடங்கள் நிரப்புவதற்கு இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் 32 காலியிடங்கள், மெக்கானிக்கல் பிரிவில் 45 இடங்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 29 இடங்கள் உள்ளன. தகுதியும் தேர்வு முறையும் இவற்றுக்கு பி.இ.,. பி.டெக். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்புத் தேர்ச்சி அவசியம். நடப்புக் கல்வி ஆண்டில் (2017-2018) பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35. தகுதியுடையோர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் 80 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வு சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் 12 முக்கிய நகரங்களில் நடைபெறும். இதில் வெற்றிபெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்....

அலைகடல் அபிஷேகத்தில் ஐந்து லிங்கங்கள்!

Image
குஜராத்-பவநகர் குஜராத் மாநிலம் தலைசிறந்த சிவாலயங்களைத் தன்னகத்தே கொண்ட பெருமை உடையது. சோம்நாத் மஹாதேவ், துவாரகாதீஷ் போன்ற பல முக்கியமான ஆலயங்கள் அம்மாநிலத்தின் நீண்ட கடற்கரையையொட்டியே அமைந்துள்ளன. பல சிவாலயங்கள் கடற்கரைக்கு மிக அருகில், அன்றாடம் கடல் நீர் மட்டம் உள் வாங்கும்போது வெளியில் தெரிவதும், நீர் மட்டம் உயரும் போது மூழ்குவதுமாக அமைந்துள்ளன. அவற்றுள் பவநகரில் உள்ள ஸ்ரீநிஷ்களங்க மஹாதேவ் மந்திர், கவி காம்போய் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் மந்திர், யூனியன் பிரதேசமான டையு-டாமன் கடற்கரையில் உள்ள ஸ்ரீகங்கேஷ்வர் மஹாதேவ் மந்திர் ஆகியன குறிப்பிடத்தக்கவை. இந்த டாமன் டையு  இரு இடங்களும் அக்காலத்தில் போர்ச்சுக்கீசிய காலனிகளாக இருந்தவை. டையு தீவின் கிழக்குப் பகுதியில் டையுவிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஃப்யூதாம் என்ற கிராமத்தின் நாகோவா கடற்கரையோரத்தில் தரைமட்டத்திற்குக் கீழ் உள்ள குகையில் ஐந்து சிவலிங்கத் திருமேனிகளைக் கொண்ட ஸ்ரீகங்கேஷ்வர் மஹாதேவ் மந்திர் அமைந்துள்ளது. இங்கு ஐந்து சிவலிங்கங்கள் இருப்பதன் பின்னணியில் மஹாபாரத காலத்தையொட்டிய கதை ஒன்று கூறப்படுகிறது. பஞ்ச...

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

Image
இரவில் தூங்கி காலையில் எழும் போது தாடைப்பகுதிகளில் வலி அல்லது அடிக்கடி லேசான தலைவலியை உணர்கிறீர்களா? அப்படியானல், அதற்கு காரணம் இரவில் தூக்கத்தில் உங்களுக்கு பற்களைக் கொறிக்கும் பழக்கம் இருப்பது தான். பெரும்பாலும் இந்த பழக்கமானது அதிகப்படியான வேலைப்பளுவால் உண்டாகும் மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வரும். சில சமயங்களில், வளரும் குழந்தைகளும் இரவில் தூக்கத்தில் இம்மாதிரியான பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு பற்களைக் கொறிப்பதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்தும், இதை சரிசெய்வதற்கான சில இயற்கை வழிகள் குறித்தும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். காரணங்கள் ஒருவர் தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் பொதுவான சில காரணங்களாவன: *  மனக்கவலை :  அதிகளவு மன அழுத்தம் மற்றும் மனக் கவலையில் ஒருவர் இருந்தால், தூக்கத்தில் பற்களைக் கொறிக்க அதிக வாய்ப்புள்ளது. *  மருந்துகள் :  சில சமயங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளான மன இறுக்கத்தை...

வேலை வேண்டுமா? - பாரத ஸ்டேட் வங்கிப் பணி 8301 எழுத்தர் தேவை

Image
பா ரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பதவியில் (Junior Associate-Customer Support and Sales) 8,301 பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். தேவையான தகுதி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த மாநிலத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அம்மாநில மொழியில் எழுதவும் வாசிக்கவும் பேசவும் புரிந்துகொள்ளவும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தத் திறன்களைச் சோதிக்கும் விதமாக எழுத்துத் தேர்வு முடிந்ததும் மொழித்திறன் தேர்வு நடத்தப்படும். இரண்டு விதமான தேர்வு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வு என்பது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய தேர்வுகளை உள்ளடக்க...

அனுமன் இருக்க பயமேன்!

Image
எத்தனை இன்னல்கள் இருந்தாலென்ன... அனுமனை வணங்குங்கள். அத்தனையும் தவிடுபொடியாக்கி, அருள்வார் அஞ்சனை மைந்தன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். கஷ்டமும் கவலையும் யாருக்குத்தான் இல்லை. துக்கமும் வேதனையும் அனுபவிக்காதவர்கள் என்று யார் இருக்கிறார்கள் இங்கே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சோகங்கள். இவற்றில் இருந்து, ஒரு மீட்சி கிடைக்காதா, இதையெல்லாம் கடந்து, நல்லதுகள் நமக்கு நடக்காதா என்று ஏங்கித்தவிக்கிற சாதாரண மனிதர்கள்தானே நாம். ஆனானப்பட்ட, ஸ்ரீராமபிரானுக்கே அவ்வளவு பிரச்னைகள். மனிதனாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, சாதாரண மனிதரைப் போலவே வாழ்ந்து காட்டிய உன்னத மனிதருக்கு, உத்தம புருஷருக்கு பெரிதும் துணை நின்றவர்... ஆஞ்சநேயப் பெருமான். அஞ்சனை மைந்தன் இருக்க எதற்கும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எதன் பொருட்டும் வருந்த வேண்டிய அவசியமே இல்லை. அருகில் பெருமாள் கோயில் இருக்கும். அங்கே ஆஞ்சநேயர் தனிச்சந்நிதியில், நமக்கு அருள்வதற்காகவே காத்திருக்கிறார். இன்னும் பல ஊர்களிலும் பகுதிகளிலும் தனிக்கோயிலில் இருந்து, அருளாட்சி செய்கிறார். அனுமனை மனதார வேண்டிக் கொண்டு, 108 முறை ஸ்ரீரா...