கிராம மேம்பாட்டுக்கு உலக வங்கி நிதி
தமிழகத்தில் உள்ள கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி 10 கோடி டாலர் (6,400 கோடி) நிதி வழங்கியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் ஜனவரி 31அன்று தெரிவித்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் உலக வங்கியும் மத்திய அரசும் ஜனவரி 30 அன்று கையெழுத்திட்டன. தமிழ்நாடு கிராமப்புற மாற்றத்துக்கான இந்தத் திட்டத்தால் 26 மாவட்டங்களும் 4 லட்சம் மக்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.